செய்தி


2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..
Showing posts with label கபிலர். Show all posts
Showing posts with label கபிலர். Show all posts

Wednesday, 15 May 2013

8.அடும்பு -adumbu



ங் இலக்கியத் தாவரங்கள்

      8.அடும்பு

கடற்கரையை ஒட்டிய வறண்ட பகுதிகளில் நிலம் படற்ந்து மண்டிக் கிடக்கும் ஒரு தாவரம்,


மலர்கள் மணி போன்ற வடிவத்தில், பல வண்ணங்களில் காணப்படும். அதன் இலைகளை சங்க இலக்கியங்களில் குறிப்பிடும்போது
‘மானடியன்ன கவட்டிலை அடும்பு’ எனவும்,
சித்தர் இலக்கியங்களில்-
‘ஆட்டுக்கால் அடும்பு’ எனவும்,
விலங்கினங்களின் குளம்பு வடிவில் இலைகள் இருப்பதைக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக மானின் குளம்பும், ஆட்டுக் காலின் குளம்பும் பொருத்திக் கவட்டிலை அடும்பு எனகுறிக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும்.

சங்க இலக்கியங்களில் தாவரங்களை சரியாக அடையாளம் காணும் விதத்தில் பார்த்தவுடன் தெரிந்துக்கொள்ளும் வகையில் புறத்தோற்றத்தின் பண்புகளைக் குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. இதுதான் பிற்காலத்தில் ஆங்கில தாவரயில் பெயர் சூட்டுவதற்கு அடிப்படையாக இருந்துள்ளது என நாம் பெருமையுடன் உலகிற்கு எடுத்துக் கூறலாம்.

இந்த அடும்பு தாவரத்தைக் குறிப்பிடப் பயன்படுத்திய இருசொற் பெயரை ‘மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்’, ‘ஆட்டுக்கால் அடும்பு’ என்பது தான் தாவரவியல் பெயராக எடுத்துக் கொண்டு,
                                     Ipomoea pes-caprae – என வழங்கப்பட்டுள்ளது. 
இதில் pes-caprae- என்பது விலங்கினங்களின் குளம்பு என பொருட்படக் கூறப்பட்டுள்ளது, இது பொதுவாக விளங்கினங்களின் குளம்பு என பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் குறிப்பாகக் குளம்பின் அளவை இலையின் அளவாகக் கருத்தில் கொள்ளும் போது மானின் குளம்பும், ஆட்டின் குளம்பும் மிகவும் பொருந்துவதால் தொல்காப்பியர் கூற்றான 

இயற்கைப் பொருளை இற்று எனக் கிளத்தல்.19 கிளவியாக்கம்


என்ற பாடல் வரிக்கு ஏற்ப அமைந்துள்ள சங்கால இலக்கியப் பெயர்தான், நூறு சதவீதம் பொருந்துவதாக உள்ளது. 

அடும்பின் அடைமொழி  சங்கால புலவர்களின் கூறிய பார்வைக்கு சரியான எடுத்துக்காட்டுதலுக்கு - எடுத்து காட்டாகவும், தாவர இருசொற் பெயரீட்டு (Binomial Namenclature) முறைக்கு உலகிற்கு முன்னோடியாக உள்ளது, என்பது கருத்தில் கொள்ள வோண்டிய ஒனறாகும்

ங் இலக்கியம்



        எட்டுத்தொகை
அகநானூறு


  • Ø  ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் – 80:8
  • Ø  அடும்புகொடி சிதைய வாங்கிகொடுங்கழிக் – 160:3
  • Ø  அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் –  320:9
  •     ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – 330:14


கலித்தொகை


  • Ø  கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு – 127. (10):20
  • Ø  அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, 'மணந்தக்கால் – 132. (15):16
  • Ø  ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு உதுக் காண்–144. (27):30

குறுந்தொகை


  • Ø  மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் – 243-1
  • Ø  அடும்பு இவர் மணற் கோடு ஊர நெடும் பனை – 248:5
  • Ø  'அடும்பு அவிழ் மணி மலர் சிதைஇ மீன் அருந்தும் – 349:1
  • Ø  அடும்பின் ஆய் மலர் விரைஇநெய்தல் – 401-1

நற்றிணை


  • Ø  மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி – 145-2
  • Ø  குன்று ஓங்குவெண் மணற் கொடி அடும்பு கொய்தும், – 254:2
  • Ø  பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – 272:3
  • Ø  அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்துஅவர் – 338:2
  • Ø  கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – 349:2

பதிற்றுப்பத்து


  • Ø  தாழ்அடும்பு மலைந்த புணா வளை ஞரல – 30:6
  • Ø  அடும்பமல் அடைகரை அலவனாடிய – 51:7

ஐங்குறுநூறு


  • Ø  ஏர் கொடிப் பாசடும்பு பரியவூர்பு இழிபு – 101:2





பத்துப்பாட்டு
குறிஞ்சிப் பாட்டு 


  • Ø  அடும்புஅமர்ஆத்திநெடுங்கொடி அவரை -  87

பட்டினப்பாலை


  • Ø  வறள் அடும்பின் மலர் மலைந்தும் – 65

பொருநராற்றுப்படை


  • Ø  வறள் அடும்பின் இவர் பகன்றைத் – 195


இலக்கியங்களின் தாவரயியல் அடைமொழி பெயர்



  • வறள் அடும்பு உருத்திரங்கண்ணனார்
  • கரைஅமல் அடும்பு நல்லந்துவனார்
  • கவட்டிலை அடும்பு பெருங்கண்ணனார்
  • பொம்மல் அடும்பு நல்வெள்ளையார்
  • கவட்டிலை அடும்பு நம்பி குட்டுவனார்
  • ஆய் மலர் அடும்பு அம்மூவனார்.
  • மாக்கொடி அடும்பு  நம்பி குட்டுவன்
  • மணற் கொடி அடும்பு  உலோச்சனார்
  • ஆய் பூ அடும்பு நல்லந்துவனார்
  • வறள் அடும்பு  முடத்தாமக் கண்ணியார்
  • அடைகரைதாழ் அடும்பு  பாலைக் கெளதமனார்.
       



        தாவர வகைப்பாட்டியல் 



Classification
Name
வகைபாடு 
PIC Name
Kingdom
PLANTAE
உலகம் 
தாவரம்
Phyllum
ANGIOSPERM
இனம்  
பூக்கும் தாவரம்
Division
DICOTYLEDONAE
தலைமுறை 
இரு வித்திலை
Class
GAMOPETALAE
வகுப்பு 
இணை இதழ் தாவரம்
Sub Class
BICARPELLATAE
குலம் 
இருசூலக இலைகள்
Order
POLEMONIALES
தலைக்கட்டு 
Family
CONVOLVULACEAE Willis.
குடி 
கூதளங் குடி
Genus
Ipomoea Linn. Old Genus - Convolvulus
பிறவி  

Species
pes-caprae (L.) R.Br.
பெயர்வழி  
அடும்பு
Botanical Name
Ipomoea pes-caprae (L.) R.Br.
தாவரவியல் பெயர் 
அடும்புக் கூதளம்


Synonym
Convolvulus pes-caprae
Ipomoea biloba Forsk,
Ipomoea maritima R.Br.
வேறு பெயர்கள்
Habit
Herb
வளரியல்பு 
சிறு செடி  

                                                    அடும்பு
                                                                         Ipomoea pes-caprae

தாவர விளக்கம்

கொடிகளின் பண்புகள்
வளரியல்பு : நிலம்படிந்து வளரக்கூடியவை.
இலைகள் : 2-மடல்களானவை, ஏறக்குறைய 2-3 * 5-6 செமீ பரப்பளவுடையது, இணைநரம்புகள் உள்ளவை.
மஞ்சரி : மலர்க்கொத்து (Panicle), தண்டு சுமார் 6 செமீ. நீளமானவை
மலர்கள் : 1 தெளிவானவை, புல்லி-மடல்கள் சமமானவை. அல்லிகள் இளஞ்சிவப்பு நிறமுடையது, குறுக்களவு சுமார் 5 செ.மீ. நீளம், புனல் போன்ற வடிவானவை.
மகரந்தம் : மகரந்தத்தாள்கள் கீழ் நீள் உரோமங்கள் காணப்படும்.
கனி : வெடிவுலர்க்கனி (Capsule) குறுக்களவு சுமார் 1.5 செ.மீ. நீளமானது.



விதை : பெரிதானவை, அடர்ந்த பழுப்பு, கம்பளம் போன்ற மென்-உரோமங்கள் உடையவை.
பூக்கும் பருவம் : நவம்பர் முதல் பிப்ரவரி வரை பூக்கும்.
காய்க்கும் பருவம் : கனிகள் ஜனவரியில் காய்க்கும்.
வாழ்விடம் : சமவெளிகள், கடற்கரையோரங்கள் போன்ற இடங்களில் வளரக்கூடியவை. கடற்கரைகளின் பிரதான தாவரங்களில் ஒன்றாகக் கருதலாம். பாலக்காட்டிலும் ஓரளவு காணப்படும்.
பரவியிருக்குமிடம் : வெப்பமண்ட நாடுகளில் காண்படும்.





மேனாள்  தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர், தாவரத் தகவல் மையம், பண்ருட்டி.



Saturday, 13 April 2013

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் - நூல் வெளியீடு



கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் - நூல் வெளியீடு

 புத்தக ISBN – 978-81-923771-1-7



8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்

திரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.



சங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.





08.07.2012 அன்று நடைபெற்ற 15-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில்
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிஅரசரும்இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான திரு அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு பி. சுரேந்திரமோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் என்.எல்.சி மனிதவள இயக்குனர் ச.கு. ஆச்சார்யா பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மற்றும் மணிவாசகம் பதிப்பக உரிமையாளர்

சிறந்த நூல்





கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் மதிப்புரைகள்
    
அரிமாநோக்கு


குங்குமம்



தினமணி