இரா. பஞ்சவர்ணம் -நூல்கள்
1.பிரபஞ்சமும் தாவரங்களும்
2.கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்
3.தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
4.தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில் - 1 அரசமரம்
5.திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்
6. "தமிழ்நாட்டுத்தாவரக் களஞ்சியம் வரிசையில்"2-9 சிறுதானயத் தாவரங்கள்
7. சிறுதானியங்களும் உணவுவகைகளும்
8 வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்
9 “தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்" 10 பலா மரம்
10 “தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்" 11 பனைமரம்
11 பனை பாடும் பாடல்
12 திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்
பிரபஞ்சமும் தாவரங்களும்
“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
பிரபஞ்சம் நூல் வெளியீடு
பிரபஞ்சமும் தாவரங்களும் |
“பிரபஞ்சமும் தாவரங்களும்’ 1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்
சிறந்த நூல்
![]() |
பஞ்சவர்ணம் |
1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலுக்கான பரிசு, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க திரு இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்
சிறந்த நூல் ஆசிரியர்
![]() |
பஞ்சவர்ணம் |
1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் “பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலை தொகுத்து வழங்கிய திரு இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு சிறந்த நூல் ஆசிரியருக்காணதொகையை, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க, என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள், என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரபஞ்சமும் தாவரங்களும் மதிப்புரைகள்
அரிமாநோக்கு
![]() |
பிரபஞ்சமும் தாவரங்களும் |
![]() |
பிரபஞ்சமும் தாவரங்களும் |
![]() |
பிரபஞ்சமும் தாவரங்களும் |
![]() |
பிரபஞ்சமும் தாவரங்களும் |
திருசக்தி
![]() |
பிரபஞ்சமும் தாவரங்களும் |
பிரபஞ்சமும் தாவரங்களும் இரண்டாம் பதிப்பு
![]() |
பிரபஞ்சமும் தாவரங்களும் |
விலை ரூ - 400
பக்கம் - 404
![]() |
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் |
விலை ரூ - 360
பக்கம் - 376
8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்
திரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.
![]() |
கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் |
08.07.2012 அன்று நடைபெற்ற 15-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில்
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிஅரசரும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான திரு அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு பி. சுரேந்திரமோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் என்.எல்.சி மனிதவள இயக்குனர் ச.கு. ஆச்சார்யா பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மற்றும் மணிவாசகம் பதிப்பக உரிமையாளர்
சிறந்த நூல்
சிறந்த நூல்
பஞ்சவர்ணம் |
கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் மதிப்புரைகள்
தினமலர்
![]() |
கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் |
கபிலரின்
குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்
May 13th, 2013 - 16:00:56
கபிலரின்
குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம்,
பஞ்சவர்ணம்
வெளியீடு, காமராஜர் தெரு,
பண்ருட்டி 607106, பக்.
272, விலை 300ரூ.
குறிஞ்சிப்பாட்டில்
பதிவு செய்யப்பட்டுள்ள 112 தாவரங்கள், கபிலர் தொகுத்து வழங்கயி,
102 பூக்கள் ஆகியவற்றை இலக்கியப் புலமையோடும், அறிவியலின் அடிப்படையில் தாவரவியல் பெயரீட்டு முறையிலும் அணுகி, மிக அருமையானதொரு
பணியினைத் தாவரத் தகவல் மையம்
செய்துள்ளது.
குறிஞ்சிப்பாட்டில்
உள்ள தாவரங்கள் பட்டியல், சங்க இலக்கியங்கள், பதினெண்
கீழ்கணக்கு போன்ற இலக்கியங்களில் இடம்
பெறும் தாவரம் எனப் பட்டியலிட்டு
அதன் வகைப்பாடு, தாவர ஒளிபடம் போன்றவை,
முறையாக தொகுக்கப்பட்டுள்ளன.
கபிலர்
பற்றியும், கபிலர் குன்று பற்றியும்
செய்திகள் அடங்கிய இந்நூலின் இறுதியில்,
தாவரங்களின் (‘ஓண் செங்காந்தள்’ துவங்கி
‘வேய்’ முடிய 112) படங்கள் சிறப்பாக பதிவு
செய்யப்பட்டுள்ளன. தற்கால தாவரவியல் ஆய்வாளர்களுக்கு,
பெரிதும் பயன்படக்கூடிய பயனுள்ள நூல்.
- பின்னலூரான்.
நன்றி:
தினமலர், 12/5/2013.
3.தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
தொல்காப்பியரின்
![]() |
தொல்காப்பியத் தாவரங்கள் |
விலை ரூ - 360
பக்கம் - 320
புத்தக ISBN – 978-81-923771-3-1
தொல்காப்பியத் தாவரங்கள்
"தொல்காப்பியரியன் தொல்காப்பியத்
தாவரங்கள்"
என்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின்
பெயராகப்
பயன்படுத்தியத் தாவரங்கள் :
(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
போர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு
அடையாளமாகப் பயன்படுத்தியத்
தாவரங்கள் :
(உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி,
போந்தை, வஞ்சி, வாகை, வெட்சி)
மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :
(கடு, வேம்பு)
சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :
(அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம்,
எகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா,
நமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்)
வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத்
தாவரம் :
(காந்தள்)
கூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(வள்ளி, வள்ளை)
மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து
தாவரங்களின் ஆங்கிலப்பெயர், வகைப்பாட்டியல்,
தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள்,
தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல்
முழுவதுமாக தொகுத்து
இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற
16-வது புத்தக் கண்காட்சியில்
‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’
என்னும் நூலைசிறந்த நூலாக தேர்வு செய்து
நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவன
செயல் இயக்குநர் திட்டம் மற்றும் வணிக விரிக்கம்
திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியீட்டார்.
உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC
மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய உரிமையாளர்
திரு மீனாட்சிசுந்தரம்.
10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற
16-வது புத்தக் கண்காட்சியில்
‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’
என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன
திட்டம் மற்றும் வணிக விரிக்கம் செயல் இயக்குநர்
திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் நூல் ஆசிரியர்
திரு இரா.பஞ்சவர்ணம் அவர்களுக்கு
பரிசு வழங்கினார்.உடன்
கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC
மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய
உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம்.
இரா.பஞ்சவர்ணம் |
10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற
16-வது புத்தக் கண்காட்சியில்
‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’
என்னும் நூலைசிறந்த நூலாக தேர்வு செய்து
நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவன
செயல் இயக்குநர் திட்டம் மற்றும் வணிக விரிக்கம்
திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியீட்டார்.
உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC
மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய உரிமையாளர்
திரு மீனாட்சிசுந்தரம்.
தொல்காப்பியத் தாவரங்கள் |
10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற
16-வது புத்தக் கண்காட்சியில்
16-வது புத்தக் கண்காட்சியில்
‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’
என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன
என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன
திட்டம் மற்றும் வணிக விரிக்கம் செயல் இயக்குநர்
திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியீட்டார்.
உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC மற்றும்
மதுரை மீனாட்சி புத்தக நிலைய
உரிமையாளர் மீனாட்சிசுந்தரம்.
உரிமையாளர் மீனாட்சிசுந்தரம்.
பஞ்சவர்ணம் |
10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற
16-வது புத்தக் கண்காட்சியில்
‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’
என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன
திட்டம் மற்றும் வணிக விரிக்கம் செயல் இயக்குநர்
திரு சொ. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் நூல் ஆசிரியர்
திரு இரா.பஞ்சவர்ணம் அவர்களுக்கு
பரிசு வழங்கினார்.உடன்
கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC
மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய
உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம்.
இரா.பஞ்சவர்ணம்
மேனால் தலைவர், பண்ருட்டி நகராட்சி,
நிறுவனர் தாவரத் தகவல் மையம்,
பண்ருட்டி.
அரிமாநோக்கு
![]() |
தொல்காப்பியத் தாவரங்கள் மதிப்புரை |
தினமலர்
No comments:
Post a Comment